அமெரிக்கா உள்பட 20 நாடுகளில் பேஸ்புக் டேட்டிங் சேவையை பேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.
பேஸ்புக் நிறுவனம் பேஸ்புக் டேட்டிங் சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த வசதி அர்ஜெண்டினா, பொலிவியா, பிரேசில், கனடா, சிலி, கொலம்பியா, ஈக்வடார், கயானா, லாவோஸ், மலேசியா, மெக்சிகோ, பராகுவே, பெரு, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், சுரினாம், தாய்லாந்து, உருகுவே, வியட்னாம் மற்றும் அமெரிக்கா ஆகிய 20 நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மற்ற நாடுகளுக்கு 2020-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அமலுக்கு வரும் எனவும் ஃபேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது.
இந்த சேவையை பயன்படுத்த புதிய கணக்கு தொடங்கி தேவை இல்லை, பயனர்கள் தற்போது பயன்படுத்தும் கணக்குகளிலே இந்த சேவை இணைத்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவையில், பாதுகாப்பு அம்சமாக நிகழ் நேர வரைபட பின்தொடர்பு போன்ற டேட்டிங் தகவலை மெசெஞ்சர் மூலம் நண்பர்களுக்கு அனுப்பிக் கொள்ளும் வசதியும் உள்ளது. டேட்டிங் சேவையில் இணைந்த நண்பர்கள் அல்லது ஃபாலோயர்களை சீக்ரெட் க்ரஷ் பட்டியலில் இணைத்துக் கொள்ள முடியும். அந்த சீக்ரெட் க்ரஷ் நபருக்கு மட்டுமே பட்டியலில் இணைத்துள்ளது தெரியும். இந்த டேட்டிங் சேவையிலும் ஸ்டோரி என்ற பெயரில் ஸ்டேட்டஸ் பகிரும் வசதி உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.